உண்மையை போட்டுடைத்த லாசரஸ்

ஞாயிறு தோறும் நடைபெறும் ஜெப கூட்டங்களில் சில மதபோதகர்கள் அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அரசியல்வாதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு சில பாதிரிகள் ஜெப கூட்டங்களில் கிறிஸ்தவர்களை குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர் என பிரபல கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் தெரிவித்துள்ளார். இதனால், கிறிஸ்தவ பாதிரிகளின் போதனைகளை கேட்டு தவறாக வாக்களித்த கிறிஸ்தவர்கள் இடையே மோகன் சி லாசரஸின் இந்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.