குஷ்பு குற்றச்சாட்டு

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க சட்டமன்ற வேட்பாளராக களம் காணும் நடிகை குஷ்பு, அங்குள்ள புஷ்பா நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘ஸ்டாலின் தன்னுடைய ஆட்களை அனுப்பி என் வீட்டில் கல் விட்டு அடித்தார்கள். சேலையைப் பிடித்து இழுத்து அசிங்கப்படுத்தினார்கள். ஜெயலலிதா சந்தித்தது போன்ற அவமானங்களை நானும் சந்தித்தேன்’ என தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தார். மேலும், தி.மு.க பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார்கள். மூன்று மாதத்திற்கு முன் இறந்த முதலமைச்சர் தாய் குறித்து தவறாக பேசியுள்ளார்கள். ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.கவின் கோட்டை அல்ல. இது தி.மு.கவின் கோட்டை என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்றிருக்க மாட்டார். இது அ.தி.மு.கவின் கோட்டை, பா.ஜ.கவின் கோட்டை, கூட்டணி கட்சிகளின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்’ என தி.மு.கவை வெளுத்துவாங்கினார்.