மண்ணெண்ணெய் நிலையம் மறுபயன்பாடு

மத்திய அரசு அளிக்கும் இலவச எரிவாயு இணைப்பு, உடனடி எரிவாயு உருளைகள் வழங்கல் போன்றவற்றால் மண்ணெண்ணெய் தேவை பெருமளவில் குறைந்துள்ளது. இதற்கேற்ப ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து, வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. தற்போது, கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் 251 மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்களை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.