போராட உரிமையுண்டு

சேலம், கருமலைக்கூடல் பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக பத்து பெண்கள் உள்பட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுவோர் அதற்கு எதிராகப் போராட உரிமை உண்டு. டாஸ்மாக் அமைப்பது கொள்கை முடிவு என்றாலும் அதற்கு எதிராகப் போராடவும் மக்களுக்கு உரிமை உண்டு’ என்று கருத்துத் தெரிவித்து, டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.