கேரளாவில் கன்னியாஸ்திரி மர்ம மரணம்

கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் புனித தாமஸ் கான்வென்ட் என்ற இல்லத்தில் வசித்து வந்தார் இடுக்கியைச் சேர்ந்த 45 வயதான சகோதரி ஜசீனா என்ற கன்னியாஸ்திரி. ஜசீனா‌ தலைவலி என்று கூறியதாகவும், பிற கன்னியாஸ்திரிகளுடன் பிரார்த்தனை செய்யவில்லை. மதியம் ஒரு‌ மணிக்கு மதிய உணவுக்கு அவரை அழைக்கச்‌ சென்ற போது அறையில் அவர் இல்லை. இதனை காவல் துறை விசாரணை செய்து கொண்டிருந்த போதே, ஜசீனாவின் உடலை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அது அருகில் உள்ள குவாரியில் இருக்கிறது கான்வென்ட் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதை அகால மரணம் என்று வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஜசீனா‌ கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என கான்வென்ட் நிர்வாகம் கூறியுள்ளது.