பினராயி மருமகன் கைது

கடந்த 2009ல் கோழிக்கோட்டில், ஏர் இந்தியா அலுவலகம் அருகே ஒரு வன்முறை ஊர்வலத்தை நடத்தியதற்காக நீதிமன்றம், கேரள முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ், சி.பி.எம் சட்டமன்ற உறுப்பினர் டி.வி ராஜேஷ் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியது. தற்போது, ஜாமீன் பெற்று வெளியில் உள்ள அவர்கள்,. பல வாரண்டுகள் வழங்கப்பட்ட பின்னரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தனர். இந்நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. கேரளாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இது பிணராயி விஜயனுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.