ஹலால் இல்லாத உணவு தவறா?

கேரளாவில், கங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் அமைந்துள்ள மீனங்காடி பகுதியில் ஹலால் அல்லாத இறைச்சியை விற்பனை செய்ததற்காக அங்குள்ள சில முஸ்லிம்கள் ஷாஜி என்ற ஒரு கிறிஸ்தவ விவசாயியைத் மோசமாக தாக்கியுள்ளனர். மேலும் பச்சை இறைச்சியை அவர் வாயில் திணித்து உண்ணவைத்து கொடுமை செய்துள்ளனர். ஷாஜியின் மூன்று சக்கர வாகனம் 150 கிலோ இறைச்சியுடன் இந்த கும்பலால் தீயிட்டு எரிக்கப்பட்டது. கேரளாவில் சுமார் 6,000 உறுப்பினர்களைக் கொண்ட ‘கிசான் மித்ரா’ என்ற விவசாயிகளின் கூட்டுறவு அமைப்பு, கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று ஹலால் அல்லாத தரமான இறைச்சி விற்பனையை ஆரம்பித்திருந்தது. கேரளாவில் முஸ்லிம்களால் விற்கப்படும் தரமற்ற ஹலால் இறைச்சியை தவிர்த்து பொதுமக்களுக்கு தரமான இறைச்சி வழங்க ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இது இறைச்சித் தொழிலில் அவர்களது ஏகோபித்த ஆதிக்கத்தை நிறுத்திவிடும் என்பதால் அதனை தடுக்க இப்படி மூர்கமாக செயல்படுகின்றனர் என கிசான் மித்ராவின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் மனோஜ் செரியன் கூறியுள்ளார். இவருக்கும் முஸ்லிம்கள் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.