சர்வதேச சிறுதானிய ஆண்டு

வரவிருக்கும் 2023ம் ஆண்டை, ‘சர்வதேச சிறுதானிய ஆண்டு’ என அறிவிக்கக் கோரிய தீர்மானம் ஐ.நா சபையில், ஒருமனதாக நிறைவேறியுள்ளது. பாரதத்துடன் இணைந்து வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகள் தாக்கல் செய்த இந்த தீர்மானத்தை, 70 நாடுகள் வழி மொழிந்தன. 193 நாடுகளும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்தன. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் சிறுதானியத்தை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.