ஹரியானா முதல்வரிடம் வலியுறுத்தல்

நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அருகிலுள்ளது குருகிராம். ஐ.டி நகரமான இங்கு தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அதில் பணியாற்ற வேற்று மாநிலங்களிலிருந்து பலரும் வந்து வசிக்கின்றனர். இதில் முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவர்கள் தங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைகளை மசூதிக்கு வெளியே சாலைகளிலும், பொதுவெளிகளிலும் நடத்தி பொதுமக்களுக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக குருகிராமில் பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குருகிராமின் மாநகராட்சியில் 126 புதிய இறைச்சிக் கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து குருகிராமை சேர்ந்த ஹிந்து சங்கர்ஷ் சமிதி எனும் அமைப்பினர் முதல்வர் மனோகர் லால் கட்டரிடம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில், ‘ஹரியானாவின் பழம்பெருமை வாய்ந்த ஷீத்லா மாதா கோயிலுக்கு, அருகிலுள்ள ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் பெருமளவில் மக்கள் வருகை தருகின்றனர். குருகிராமில் துரோணாச்சாரியார் மற்றும் ஷீத்தலா மாதா கோயிலை மதிக்கும் வகையில் தெய்வீக நகரமான குருகிராமில் இறைச்சிக் கடைகளை புதிதாக அனுமதிக்க மாட்டேன் என கடந்த அக்டோபர் 17, 2017ல் நீங்கள் கூறியிருந்தீர்கள். எனவே, புதிய கடைகளுக்கு அளித்த அனைத்து விண்ணப்பங்களையும் ரத்து செய்ய வேண்டும். தற்போதுள்ள இறைச்சிக் கடைகளை குருகிராமிற்கு வெளியே 10 கி.மீ தொலைவிற்கு இடமாற்றம் வேண்டும். அங்கு அனைத்து இறைச்சி கடைகளையும் ஒரே இடத்தில் அமைக்கப்பட வேண்டும். மேலும், சட்டவிரோதமாக குருகிராமில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.