ஹிந்துக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்?

ஏப்ரல் 6 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அ.இ.அ.தி.மு.க, தி.மு.க அணிகள் போக, தாங்களும் தேர்தல் களத்தில் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக வேறுசில கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. உண்மையில் போட்டி என்பது இரண்டு அணிகளுக்கு இடையில்தான். இரண்டில் தி.மு.க. கூட்டணிக்கு ஏன் வாக்களிக்கக்கூடாது எனப் பார்ப்போம்:

தி.மு.க. கூட்டணிக் கட்சிகள்: காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் அமைப்புகளுள் பல; இதுதவிர, பா.ம.க.விலிருந்து விலகி தனியாகக் கட்சி நடத்தும் வேல்முருகன், கொங்கு சமூகத்தின் பெயரைக் கூறி கட்சி நடத்தும் ஈஸ்வரன் போன்றவர்கள். இந்த அனைவரின் நோக்கம், தமிழகத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவதோ, வளமான தமிழகமாக மாற்றுவதோ அல்ல. சிறுபான்மையினரின் அடிமைகளாகவேமாறி, இந்நாட்டின் பாரம்பரியமான கலாச்சாரத்தை சீர்குலைப்பதுதான்.

தி.மு.க: 1967லிருந்து தமிழகத்தை தி.மு.க.வும், அதிலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க.வும்தான் மாற்றி மாற்றி ஆள்கின்றன. பண்பாட்டுக்கு விரோதமாகப் பேசுவது;, கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பொது மேடையில் அநாகரிகமாகப் பிரச்சாரம் செய்வது – -இவை தி.மு.க.வினருக்குத் தொழிலாகி விட்டது. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்… என்ற வாசகம் ஈ.வெ.ரா சிலையடியில் நீடிப்பது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. தி.மு.க பெரும்புள்ளிகள் ஹிந்துக் கடவுளரை, சைவ, வைணவ (ஹிந்து) சமயங்களின் சம்பிரதாயங்களை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசினார்கள், விபூதி பூசுவதை எதிர்த்தார்கள், கோயில்களில் வழங்கப்படும் விபூதியைத் தரையில் கொட்டினார்கள், நெற்றியில் இட்ட விபூதியைப் பலர் முன்னிலையில் அழித்தார்கள்.

ஆனால், முஸ்லிம்கள் தலையில் தொப்பி அணிவதைக் கிண்டல்செய்யமாட்டார்கள். மாறாக, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொப்பி அணிந்து முஸ்லிம்களின் பாதுகாவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வார்கள்.”ஞாயிற்றுக் கிழமைகளில் கருட தரிசனம் மிக்க பலன் தரும், ஆருத்ரா கண்டால் ஆறுஜென்மமும் அதிர்ஷ்டம், வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருப்பின் வரம் நிச்சயம், மகாமகக் குளத்தில் மூழ்கினால் முப்பாட்டன் காலம்முதல் மூண்டுவரும் பாவம் தொலையும் என்ற பழைய போதை இன்னும் மக்களிடம் தெளியக் காணோம்.

சொர்க்கமாவது, நரகமாவது. அந்தப் புராணப் புளுகை நம்பாதே, நரகன் என்ற அசுரனைக் கண்ணன் கொன்றான் என்று எவனோ எதற்கோ எழுதிய கட்டுக்கதையை வைத்துக்கொண்டு ஒரு விழா, இது வீண் அல்லவா?” என்று எழுதியவர் தி.மு.க தலைவர் அண்ணாதுரை. 63 நாயன்மார்களை இழிவாகப் பொது மேடையில் பேசியவர் இதே அண்ணாதுரை. பூலோகத்தில் பெண் பன்றி ஒன்று 63 குட்டிகள் ஈன்றுவிட்டு இறந்துவிடுகிறது. தாயை இழந்த குட்டிகளுக்கோ பசி தாளவில்லை. பசியால் அழுகின்றன.

அவற்றின் அழுகுரல் கயிலாயத்தில் உள்ள பரமசிவன் காதில் விழுகிறது. பரமசிவன் உடனே புறப்படுகிறார் பூமிக்கு; பன்றியாக வடிவெடுத்துப் பசித்த பன்றிகளுக்குப் பாலூட்டுகிறார். பாலுண்ட அந்தப் பன்றிகளே பிற்காலத்தில் 63 நாயன்மார்களாகப் பிறந்தன என்பது புராணம். அவை சாதாரணப் பன்றிகளே அல்ல, சிவப் பன்றிகள்” என்று கேலியாகப் பேசியவர்…? சாட்சாத் ‘பேரறிஞர்’!

கருணாநிதி ஒரு படி மேலேபோய் ஹிந்துக் கடவுள்களையும் விரதங்களையும் தூற்றிய கோரம் இது: 1988-ல் ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், “இந்த ரம்ஜான் நோன்பு உடலை மட்டுமல்லாமல், உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. அதனால், நான்கூட உங்களுடன் சேர்ந்து அறுபது நாட்கள் வேண்டுமானாலும் இந்த உண்ணாநோன்பு இருப்பேன். ஆனால், எங்கள் ஹிந்து மதத்தில் உள்ள ஏகாதசி விரதம், கிருத்திகை விரதம் போன்ற விஷயங்களில் எங்களுக்குச் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. அந்தத் தினங்களில்தான் நாங்கள் அதிகமாகச் சாப்பிடுவோம்” என்று பேசியது ஹிந்துக்கள் மனதில் வடுவாகப் பதிந்துள்ளது..

திராவிட இயக்கத்தினர், ரோமாபுரி ராணிகள், கம்ப ரசம், தேவ லீலைகள், குமரிக் கோட்டம், தங்கையைக் கண்டு காதல் கொண்ட அண்ணனின் கதை, ஆரிய மாயை போன்ற ஆபாசக் குப்பையை நாவல் என்ற பெயரில் வெளியிட்டுப் பண்பாட்டு சீரழிவைப் பரப்பினார்கள். கவிச் சக்கரவர்த்தி கம்பனை காமப் பார்வையில் எழுதியுள்ள புத்தகம் கம்பரசம். “அழுகுரலுடன், பாகற்காயைப் பறிக்கத் திட்டமிட்ட திருமதிகள் போலவே, கம்பரும் சோகத்தோடு சோகமாகத் தமது காமக்கள்ளையும் கவிக்கலயத்திலே ஊற்றித் தருகிறார்.

இது நமது அருமைக் கலா ரசிகர்களுக்கு இனிக்கிறதாம், சிலர் கலயத்திலே வீழ்ந்துள்ள ஈ, எறும்பினை எடுத்துவிட்டு பருகுகின்ற முறைபோல் சிலர் திருத்தங்கள் செய்கிறார்கள் என அதில் கம்ப ராமாயணத்தை இழித்தும் பழித்தும் எழுதி, தமிழர்களின் புத்தியில் காமத்தை விதைத்தவர் அண்ணாதுரை. இப்படிப்பட்டவர்கள் உருவாக்கிய கட்சிதான் தி.மு.க.

‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ என இரட்டை அர்த்தம் வைத்துப் பேசியவர்கள் இவர்கள். மனைவி, கணவன் அல்லாத மற்றொருவனை விரும்பினால் குற்றமாகக் கருதக் கூடாது என்று சேலத்தில் நடந்த தி.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்வோம்; இவர்களைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்து ஆறு தொகுதிகளில் போட்டியிடும் தொல். திருமாவளவன், “கோயில்களில் சிற்பங்களைப் பார்க்கும்போது அப்படி எல்லாம் பார்க்காதே, அது அசிங்கம் என்றுதான் நம்மிடையே சொல்லப்பட்டு வந்தது. ஊசி வடிவில் இருந்தால் அது தேவாலயம் என்றும், உருண்டை வடிவில் இருந்தால் அது மசூதி என்றும் கூறலாம். ஆனால், ஆபாசமான சிற்பங்கள் நிறைந்திருந்தால் அது ஹிந்துக் கோயில் எனப் புரிந்து கொள்ளலாம்” என்று அசிங்கமாகப் பேசினார். இந்த ஆறுபேரையும் ஹிந்துக்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைக்க வேண்டும் எனத் தலையெழுத்தா?

ஒரு இணையதள கருத்தரங்கில் பேசிய திருமாவளவன், ”ஹிந்து தர்மப்படி (மனு தர்மம்) எல்லாப் பெண்களுமே விபச்சாரிகள்தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது எல்லாத் தரப்பு பெண்களுக்கும் பொருந்தும். சனாதன தர்மம் இதைச் சொல்கிறது” என்று பேசினார். ஹிந்துப் பெண் ஒவ்வொருவரும் வாக்குச்சாவடியில் இதற்குப் பழிதீர்க்காமல் விடப்போவதில்லை.

தி.முக.விற்கு ஆதரவாகக் களம் காணும் வைரமுத்து, மனுஷ்ய புத்திரன், சுப.வீரபாண்டியன், வீரமணி, லாரன்ஸ், எஸ்றா சற்குணம் போன்றவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் அசிங்க சிகரம்; ஹிந்து மதத்தின் பெருமைகளை சீர்குலைக்கும் கெட்ட நோக்கத்தில் உதிக்கப்பட்டவை. இதைக் கண்டிக்கத் தவறியவர்கள் தி.மு.க. தலைவர்கள். எப்படிக் கண்டிப்பார்கள்? இவர்கள் பாலூட்டும் பாம்புகள் விஷம் கக்குவதை எப்படித் தட்டிக் கேட்பார்கள்? இந்த தேசத்தின் கலாச்சாரத்தை சீர்குலைக்க வீதியில் திரியும் இவர்களைக் கூண்டோடு தோற்கடிக்கும் கடமை ஹிந்து வாக்காளர்களுக்கு உண்டு.

-ஈரோடு சரவணன்