இந்து முன்னணி முயற்சிகள்

திருப்பூர் மாவட்டம் 15வேலம்பாளையம் காவிலிபாளையம்புதூர் ஆரம்பப்பள்ளியில் மாணவர்களுக்கு கிறிஸ்துவ மதமாற்ற கும்பல் பைபிள் புதிய ஏற்பாடு புத்தகங்கள் விநியோகிக்க சென்றது. இத்தகவல் அறிந்த இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் அங்கு சென்றனர். தகவல் அறிந்த அந்த மதமாற்ற கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பின்னர், மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட மதமாற்ற புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டன. சேலம் மாவட்டம் சங்ககிரி நகர் ஆனைகல் பாளையம் பகுதியில் 200 ஆண்டுகள் பழைமையான ஐயனார் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முன்பாக சட்ட விரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை கண்டித்தும் இதனை தடுக்கக்கோரியும் இந்துமுன்னணியினர் புகார் மனு அளித்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவனாங் கவுண்டனூர் பஞ்சாயத்துகு உட்பட்ட மலை பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து சிலுவை அமைத்து ஜெபக்கூடத்தை கட்ட கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பினர் துவங்கினர். இதனை கண்டித்து இந்துமுன்னணி சார்பில் சங்ககிரி கோட்டச்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.