கிரேட்டா துன்பெர்குக்கு கண்டனம்

ஐ.நா.வின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரியான (சி.ஓ.ஓ) மொஹிந்தர் குலாட்டி, பாரதத்திற்கெதிராக மக்களையும் உலகத்தையும் திருப்ப முயன்ற காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘2018, 2019 ஆண்டுகளில் உங்கள் பேச்சை கேட்டபோது, ஒரு நல்ல எதிர்கால மாற்றத்திற்கு ஊக்குவித்து வழிகாட்டும் இளைய தலைமுறை நீங்கள் என நான் கருதினேன். ஆனால், பாரத விவசாய சட்ட எதிர்ப்பு போராட்டத்தை நீங்கள் உங்களுக்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டீர்கள். இதனால் எங்கள் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வீணானது’ என வருத்தப்பட்டுள்ளார்.