அள்ளித் தந்த தமிழகம்

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமியில், ராமருக்கு ஆலயம் அமைத்திட பாரதமெங்கும் மக்களிடம் கடந்த ஒரு மாதமாக நிதிப் பங்களிப்பு பெறப்பட்டது. இதில் ஆன்மிக பெரியோர், தலைவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என பலரும் தன்னார்வலர்களாகப் பங்கேற்று நிதி சேகரித்தனர். இந்த மாபெரும் பணியில் தமிழகத்தில் பல்லாயிரம் குடும்பங்கள் தொடர்பு கொள்ளப்பட்டன. பல லட்சம் பேர் மனமுவந்து நிதியளித்தனர். இதனால் தமிழகத்தில் வெற்றிகரமாக 108 கோடி ரூபாய் சேகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான் என்பதை இது மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. இதனை மெய்ப்பித்த தமிழக மக்களுக்கு கோடானுகோடி வணக்கங்கள். வருங்காலங்களிலும் தமிழகம் நாயன்மார்களின் பூமி, ஆழ்வார்களின் பூமி, தேசபக்தர்கள் பூமி என்பதை நாம் நிரூபிப்போம் என்ற எண்ணம் இதனால் வலுப்பெற்றுள்ளது.