டிரோன் எதிர்ப்பு அமைப்பு

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் அத்துமீறி புகுந்த ஒரு டிரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். டிரோனுடன் இணைக்கப்பட்டிருந்த 5 கிலோ வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 27ல் ஜம்மு விமானப்படைத் தளத்தில் 2 டிரோன்கள் மூலம் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் குண்டுகளை வீசினர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் முஸ்லிம் பயங்கரவாத குழுக்களும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களும் தங்களது பயங்கரவாத தொடர்புகளுக்கு ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் கடத்துவதற்கும், குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் டிரோன்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கர்நாடக மாநிலம் கோலாரில் சோதித்துப் பார்க்கப்பட்ட டிரோன் எதிர்ப்பு அமைப்பின் புரோட்டோடைப்பை, சோதித்து பார்ப்பதற்காக, ஜம்மு மற்றும் பஞ்சாப் எல்லைக்கு கொண்டு வருமாறு டி.ஆர்.டி.ஓ.விடம் எல்லை பாதுகாப்புப் படை கேட்டுக் கொண்டுள்ளது. 4 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரேடார் கண்காணிப்பு திறன், 2 கிலோ மீட்டருக்குள் எதிரி டிரோன்களை தடுக்கும் திறன், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் அவற்றை அழிக்கும் திறன் ஆகியவையும் அதற்கு இருப்பது முன்பே சோதனையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.