தி.மு.கவினர் அட்டகாசம்

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தளர்வில்லா ஊரடங்கின்போது முதல்வரான தங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலின் போட்ட ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் 25க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கூட்டமாக பெருங்குடி மண்டல அலுவலகம் வந்து அலுவலக கூட்ட அறையில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து கோஷமிட்டனர். இதில், சிலர் முக கவசம் அணியவில்லை.யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.இது, மண்டல அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கட்சி தலைமை, இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பதுடன் கட்சி ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இது போன்றவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள்.தலைமைக்கும் நல்ல பெயர் கிடைக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.(புகைப்பட உதவி: தினமலர்)