குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

பாரதத்தில் மே 9ல் 3.66 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மே 10ல் 3.29 லட்சம் பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 82.75 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.09 சதவீதம், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 16.16 சதவீதமாக உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதையே இந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், உலக அளவில் மிக வேகமாக, 17 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள தேசமாகவும் பாரதம் விளங்குகிறது.