ஏமாற்றப்பட்ட சீக்கிய இளைஞர்கள்

காலிஸ்தானிய பயங்கரவாத தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு, பஞ்சாப், மோகா மாவட்டத்தில் உள்ள அரசு நிர்வாக வளாகத்தில் காலிஸ்தான் கொடியை நடுபவர்களுக்கு 2.500 அமெரிக்க டாலர்கள் பரிசு அறிவித்திருந்தான் அவனது பேச்சைக் கேட்ட மூன்று சீக்கிய இளைஞர்கள் பணத்திற்காக ஆசைப்பட்டு வளாகத்தில் இருந்த தேசியக்கொடியை அகற்றிவிட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றினர். தற்போது அவர்களை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த பணம்தான் அவர்களுக்கு வரவில்லை. பணத்திற்கு ஆசைப்பட்ட அந்த இளைஞர்களின் எதிர்காலம் பாழானதால் அந்த இளைஞர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது வருத்தத்தில் உள்ளனர் என தி கல்சா டுடே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.