காரைக்காலில் அம்மன் சிலை சேதம்

காரைக்காலில் மிகவும் பிரபலமான சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் பிப்ரவரி 28ம் தேதி அம்பாள் சிலையின் கை பகுதி முற்றிலும் சேதமடைந்து உள்ளது. சில மர்ம நபர்கள் இச்செயலில் இடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனை அறிந்த கோயில் நிர்வாகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தது. இது பற்றி கேள்விப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர், மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.