விதைக்கப்பட்ட விரப்புதல்வர்கள்

சி..ஆர்.பி.எப் வீரர்கள் 127 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. உயிர் தியாகம் செய்த மோகன்லாலின் மகள் குமாரி கங்கா தற்போது மருத்துவம் பயின்று வருகிறார். மகன் ஸ்ரீராம் +2 படிக்கிறார். படிப்பை முடித்த உடன் தந்தையை போலவே இருவரும் சி.ஆர்.பி.எப்பில் இணைந்து, தேசத்திற்கு சேவை புரிய விரும்புவதாக கூறியுள்ளனர். மேலும், ‘பாகிஸ்தானுக்கு ஒரு விஷயம் கூற விரும்புகிறோம். நீங்கள் பயங்கரவாதிகளை உருவாக்குங்கள். நாங்கள், ஹீரோக்களை உருவாக்குகிறோம்’ என அவர்கள் இருவரும் கூறியது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.