கம்யூனிஸ்ட்டுகளின் சர்ச்சை போஸ்டர்

ஹிந்து கலாச்சாரத்தின் மீது கம்யூனிஸ்டுகளுக்கு உள்ள ஆழமான வெறுப்பைக் காட்டும் மற்றொரு சம்பவமாக, கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பீச்சேரி விஷ்ணு கோயிலின் பெயர் பலகைக்கு மேலே கேரள முதல்வர் பினராயி விஜயனை ‘கடவுள்’ என்று சித்தரித்து சி.பி.எம் கட்சியினர் ஒரு சுவரொட்டி வைத்துள்ளனர். அதில் ‘கடவுள் யார் என்று நீங்கள் கேட்கிறீர்கள், உங்களுக்கு உணவைக் கொடுப்பவர் யாரோ அவரே கடவுள்’ என்றும் எழுதப்பட்டிருந்தது. ஹிந்து உணர்வுகளுடன் விளையாட கம்யூனிஸ்ட்டுகள் முயற்சிப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. இதே சுவரொட்டியை ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அல்லது மசூதிக்கு வெளியே வைக்க அந்த கட்சிக்கு தைரியம் இருக்கிறதா என்று அங்குள்ள ஹிந்துக்கள் கேள்வி எழுப்பினர். மேலும், இதனை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.