முதல் பதக்கம் மோடி வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் பாரதத்திற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் மீராபாய் சானு. மகளிர் 49 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை துவக்கிவைத்துள்ளார். பாரதத்திற்கு முதல் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இதைவிட ஒரு மகிழ்ச்சியான தொடக்கம் இருக்க முடியாது. மீராபாய் சானுவின் சிறப்பான செயல்பாடுகளால் பாரதம் உற்சாகம் அடைந்துள்ளது. பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது இந்த வெற்றி ஒவ்வொரு பாரதத்தினரையும் ஊக்கப்படுத்தும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.