காங்கிரஸ் அராஜகம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் செவ்வாயன்று மும்பையை சேர்ந்த ஸ்டோரியா ஃபுட்ஸ் அண்ட் பெவரேஜஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அதன் முன்னாள் தலைவர் ராகுலை அவமதித்ததாகக் கூறி அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜக்தாப்பின் அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் குண்டர்கள் இதனை செய்துள்ளனர். மும்பை காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிதின் சாவந்த் இந்த காங்கிரஸ் குண்டர்களுக்கு தலைமை தாங்கினார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜக்தாப், ‘ஸ்டோரியா நிறுவனத்துக்கு நாங்கள் ஒரு நல்ல பாடத்தை கற்பித்தோம். ஸ்டோரியா ஃபுட்ஸ் அந்த விளம்பரத்திற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர்கள் மேலும் பல பயங்கர விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், அந்த நிறுவனத்தையே நாங்கள் மூடிவிடுவோம்’ என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். மும்பையில், கொரோனா பரவல் காரணமாக 144 தடை உத்தரவு உள்ளது. அதனையும் மீறி இவர்கள் செய்துள்ள அராஜகம் சட்டம் ஒழுங்கு, காவல்துறை, நீதிமன்றம் போன்ற எந்த நீதி அமைப்பையும் இவர்கள் நம்பவும் இல்லை, மதிக்கவும் இல்லை என்பதையே காட்டுகிறது.