குரல் கொடுக்காத கம்யூனிஸ்ட்டுகள்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் குறிப்பாக அக்கட்சியை சேர்ந்த முஸ்லிம்கள், அங்குள்ள ஹிந்துக்களை தாக்கி கொன்று வருகின்றனர். இதில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள்கூட பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக  கம்யூனிஸ்ட் கட்சி கட்சியை சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் பொது சொத்துக்களுக்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றனர். சில கம்யூனிச கட்சியினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், கம்யூனிச கட்சியை சேர்ந்தவர்கள் எவரும் இதற்கு தங்களது கண்டனத்தையோ எதிர்ப்பினையோ தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காப்பது அக்கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.