ஆர்.எஸ்.எஸ் தலைவர் வேண்டுகோள்

மேற்கு வங்க வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும், ஹிந்து சமுதாயத்தின் பக்கம் நிற்கவும் மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்வயம்சேவகர்களை ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவரும் க்ஷேத்ர சம்பர்க பிரமுகருமான பித்யுத் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர், “இந்த நேரத்தில் ஹிந்து சமுதாயத்தின் பக்கம் அமைதியாக இருப்பது நமது மிகப்பெரிய கடமை. ஹிந்து சமுதாயத்தின் பாதுகாக்க நாம் தயாராக வேண்டும். வன்முறை குறித்த அனைத்து உண்மைகளையும் சரிபார்க்க வேண்டும். வதந்திகள் குறித்து எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஜனநாயக முறையில் தங்கள் புகார்களை நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும். கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ் இது போன்ற மிக மோசமான நிலைமைகள் பலவற்றை சந்தித்துள்ளது. அவற்றைக் கடந்து அது வலுவாக வெளிப்பட்டது” என கேட்டுக் கொண்டார்.