படத்தில் விஷம்

தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘கர்ணன்’ என்ற படத்தின் தலைப்பில் சிறியதாக ‘திரௌபதையின் முத்தம்” என்ற துணை தலைப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் வைத்துள்ளார். இந்த இயக்குனர், பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘மறக்க நினைக்கிறேன்’ என்ற தொடரை ஆனந்த விகடனில் எழுதியுள்ளார். இதிலிருந்தே இவரின் பின்னணி என்ன, இவர் ஏன் இப்படி ஹிந்து மதத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தும் விதத்தில் படத்தை இயக்குகிறார் என்பது தெரியவருகிறது. தமிழகத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்தும் இடதுசாரிகள், நாத்திக கும்பல், கிறிஸ்தவ மிஷனரிகள், முஸ்லிம் அமைப்பினர் கைகளில் சிக்கியிருப்பதும் இவர்கள் அனைவருக்கும் பின்புலமாக தி.மு.க செயல்படுவதும் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலை மாற அரசு, தணிக்கைத்துறை முயற்சிப்பது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பொதுமக்களாகிய நாம், நல்ல திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்ப்பது, இது போன்றவர்களின் படங்களை முற்றிலும் புறக்கணிப்பது என்று சற்று விழிப்புணர்வுடன் செயல்பட்டாலே இவர்களின் கொட்டம் அடங்கிவிடும் என்பது திண்ணம்.