அரசு நிலத்தில் தேவாலயம்

ஓசூரில் உள்ள அண்ணாமலை நகரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு இந்த தேவாலயம் கட்டுவதற்கு கடந்த 2000 ஆவது ஆண்டிலேயே பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. தற்போது, அந்த தேவாலயம் கட்டும் பணி மீண்டும் துவங்கப்பட்டு நடைப்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் தேவாலயம் கட்டும் பணி நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில் தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.