அறநிலையத்துறை தடை

கரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன், பக்தர்கள் நலன் கருதி கோயில்களின் நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வழிகாட்டு நடைமுறைகளை வகுத்துள்ளது. இதையொட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதன் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு சனிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும். கோயிலில் அத்தியாவசிய பூஜைகளில் ஊழியர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர். திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்பதுடன் கோயில்களில் நடக்கும் திருமணவிழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது. நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். கோயில்களில் உள்ள திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.