வி.எச்.பியின் மார்க் தர்ஷன் மண்டல்

ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து வருவதையொட்டி விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பை வழிநடத்தும் துறவியர்கள் பங்கு பெறும் மார்க்க தர்ஷன்‌ மண்டல் (அற வழி காட்டும் ஆன்றோர் பேரவை) நேற்று துவங்கி நடைபெற்றது. இதில் மதமாற்றம், லவ்ஜிஹாத் தடுப்பதை பற்றியும் தாய் மதம் திருப்பவும், மற்றும் அமைப்பின் பணிகளை விஸ்தரிப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், அயோத்தி ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்தின் முன்னேற்றம், சமூக பிரச்சினைகள், நாட்டில் உள்ள கோயில் சொத்துக்களின் மீதான அரசுகளின் கட்டுப்பாடு குறித்தும் இதில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் வி.எச்.பி செயல் தலைவர் அலோக் குமார், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் உட்பட தேசம் முழுவதும் இருந்து பல துறவியர்கள் பங்கேற்றுள்ளனர்.