சி.ஏ.ஏ அமலுக்கு வரும்

அசாம் சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை ஜே.பி.நட்டா வெளியிட்டார். அப்போது, ‘வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து பாதிக்கப்பட்டதால் பாரதத்திற்கு வரும் ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்க குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சரியான காலத்தில் அந்த சட்டம், தேசம் முழுதும் அமல்படுத்தப்படும். சி.ஏ.ஏவை அசாமில் அமல்படுத்த மாட்டோம் என கூறி காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிறது’ என கூறினார்.