உடைக்கப்பட்ட சாமி சிலைகள்

ஆந்திராவில் கிறிஸ்தவரான ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில், ஹிந்துக்கோயில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள போதகுட்டப்பள்ளி என்னும் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்த முருகன், தெய்வானை, வள்ளி தெய்வங்களின் திரு உருவச் சிலைகள் உடைக்கப்பட்டு கோவில் அருகே  வெளியில் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த அக்கிராம மக்கள் கோவில் முன் கூடி உடைக்கப்பட்ட சிலைகளைக்‌ கண்டு கதறி அழுதனர். இந்த சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.