சென்னையில் புத்தக கண்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 44-வது புத்தக கண்காட்சி பிப்ரவரி 24ல் துவங்கி மார்ச் 9ல் முடிவடைகிறது. 700 அரங்குகளில் 500 பதிப்பாளர்களின் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் இடம்பெற இருக்கின்றன. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படும். புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இவ்வாண்டு புத்தக கண்காட்சிக்கு 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.