காங்கிரஸின் வெற்று விளம்பரம்

சமீபத்தில் காங்கிரஸ் கட்சி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நல்லெண்ண அடிப்படையில் வழங்கியதாக கூறிக்கொண்டது. ஆனால் ‘அப்படி எதையும் அந்த நாடு பாரதத்திடம் கோரவில்லை. மேலும் அங்கு கொரோனா பரவல் தாக்கம் அதிகம் கிடையாது என்பதால் தற்சமயம் அது அங்கு தேவையும் இல்லை. கோரிக்கை விடுக்கப்படாத ஒரு நாட்டிற்கு வெற்று விளம்பரக் காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏன் காங்கிரஸ் அனுப்பியது’ என கேட்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘வெளியுறவுத்துறை ஒருபோதும்  தூங்குவதில்லை. அது அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் உள்ளது. யார் செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என கூறியுள்ளார்.