முஸ்லிம்களுக்கு பி.எப்.ஐ ஆயுதப் பயிற்சி

பிஹார் மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி..எப்.ஐ) என்ற அடிப்படைவாத அமைப்பின் ரகசிய நடவடிக்கைக்கு எதிராக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு, பீகார் காவல்துறை ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாட்னா புல்வாரி ஷெரீப்பைச் சேர்ந்த ஏ.எஸ்.பி மணீஷ் குமார், “தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி எம்.டி ஜலாவுதீன், மற்றவர் அதர் பர்வேஸ். அவர் முன்னாள் சிமி உறுப்பினர் மற்றும் தற்போது பி.எப்.ஐ மற்றும் அதன் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ உறுப்பினராக உள்ளார். பர்வேஸின் இளைய சகோதரர் 2001ம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு குற்றவாளி.

அவர்களது செயல்பாடு ஒரு விரிவான நடவடிக்கையாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் கடந்த 2 மாதங்களில் பாரதம் முழுவதிலும் இருந்து ஆட்களை அழைத்து வந்து அவர்களுக்கு போலியான பெயர்களில் ஓட்டல் அறைகள், பயணச்சீட்டுகள் பதிவு செய்துள்ளனர். ஜூலை 6, 7 தேதிகளில், ஜல்லாவுதீனும் பர்வேஸும் தற்காப்புக் கலைப் பயிற்சி என்ற போலிக்காரணத்தின் கீழ் வாள்கள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்துவது எப்படி என்று உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி அளித்தனர். அவர்கள் மத வன்முறை அறிக்கைகளால் கூட்டத்தைத் தூண்டினர். இந்த முயற்சிக்காக பர்வேஸ் மற்றும் ஜலாவுதீன் ஆகியோர் லட்சக்கணக்கில் நிதி திரட்டியுள்ளனர். இதற்கான சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் பல சாட்சிகளின் வாக்குமூலங்கள் எங்களிடம் உள்ளன’ தெரிவித்தனர்.

மேலும், வரும் ஆண்டுகளில் பி.எப்.ஐ அமைப்பின் இலக்கை அடிக்கோடிட்டுக் காட்டும் 8 பக்க ஆவணத்தையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ‘இந்தியா விஷன் 2047’ என்ற ஆவணத்தில், ‘கோழை ஹிந்துக்கள்’ மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அவர்களை அடிபணியச் செய்வதே நோக்கம். சுமார் 10 சதவீத முஸ்லிம்கள் பி.எப்.ஐக்கு ஆதரவாக அணிவகுத்தாலும்கூட இந்த இலக்கை அடைய முடியும் என கூறப்பட்டுள்ள அந்த பிரசுரங்களை அவர்கள் உள்நாட்டில் பரப்பப்பியுள்ளனர். மேலும் அதில், பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களின் உதவியுடனும், துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகளின் உதவியுடனும் பாரத அரசுக்கு எதிராக முழு ஆயுத எழுச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்  பாரத அரசையும் பெரும்பான்மை ஹிந்துக்களையும் ‘மண்டியிட’ உதவுமாறு மற்ற முஸ்லிம் நாடுகளுக்கும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தெலுங்கானா காவல்துறை சமீபத்தில் நிஜாமாபாத்தில் இதேபோன்ற நடவடிக்கையை முறியடித்ததுடன்  வன்முறையில் ஈடுபட உள்ளூர் முஸ்லிம்களுக்கு ஆயுத பயிற்சி அளித்த ஷேக் ஷதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் மொபின் போன்ற சில பி.எப்.ஐ நபர்களையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விசாரணையின் போது, ​​பி.எப்.ஐ அமைப்பினர், உள்ளூர் முஸ்லிம் இளைஞர்களை ஷரியா சட்டம் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் மூலம் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக அவர்களை ஈடுபடுத்த முற்பட்டனர். மாநிலத்தில் ஜிஹாத் நடத்த அவர்களை ஆட்சேர்ப்பு செய்வதே முதன்மையான குறிக்கோள். கொடிய ஆயுதங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முஸ்லிம்களுக்கு கற்பிப்பதற்கான பட்டறைகளை அந்த குழு நடத்தி வருகிறது என காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார்.

ஹிந்து சமூகம் மற்றும் அரசுக்கு எதிரான மீதான வன்முறை மற்றும் விரோதப் போக்கை வெளிப்படுத்தும் பல தேசவிரோத செயல்களில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான பி.எப்.ஐ ஈடுபட்டுள்ளது பல இடங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இது குறித்து எச்சரித்துள்ளனர். ஷாஹீன் பாக் தேச விரோத போராட்டங்கள், சி.ஏ.ஏ எதிர்ப்புக் கலவரங்கள், 2020ல் நடைபெற்ற பெங்களூரு கலவரங்கள் என பலவற்றை இதற்கு உதாரணம் சொல்லலாம்.

செய்தி ஆதாரம்: https://www.opindia.com/2022/07/bihar-pfi-trained-local-muslims-goal-to-subjugate-coward-hindus-by-2047-ex-police-officer-md-jallauddin-and-ex-simi-involved/