எஸ்.ஐ.டி அமைத்த உ.பி அரசு

ஹிந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி காவ்ல்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீதாபூர் வழக்கில் அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட நிலையில், லக்கிம்பூர் நீதிமன்றம் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் சீதாபூர், லக்கிம்பூர் கெரி, காசியாபாத், ஹத்ராஸ் மற்றும் முசாபர்நகர் ஆகிய இடங்களில் முகமது ஜுபைர் மீது பதியப்பட்டுள்ள 6 வழக்குகளை விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு, இரண்டு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்துள்ளது. ஐ.ஜி பிரீத்திந்தர் சிங் டி.ஐ.ஜி அமித் குமார் வர்மா இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.