களமிறங்கும் விமானப்படை

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவ, ரயில்வேயுடன் பாரத விமானப்படையும் கைகோர்த்துள்ளது. ரயில்வே ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என தனி ரயிலை இயக்குகிறது. ஆக்ஸிஜன், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை வேகமாகக் கொண்டு செல்ல ஏதுவாக விமானப்படையும் தனது விமானங்கள், ஹெலிகாப்டர்களை கொடுத்து உதவ முன்வந்துள்ளது. முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஏ.எப்.எம்.எஸ், டி.ஆர்.டி.ஓ உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளை இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவ கேட்டுக்கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.