துறவியர் சங்கம் வேண்டுகோள்

‘நாயன்மார்களும், ஆழ்வார்களும் பிறந்த ஆன்மிக பூமி, புண்ணிய பூமி தமிழகம். தி.மு.கவினர் தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில், ஹிந்து தெய்வங்கள், வழிபாட்டு முறைகளை இழிவு செய்கின்றனர். திருமணச் சடங்குகளை கொச்சைப்படுத்துகின்றனர். கந்தசஷ்டி கவசம், திருப்பாவை உள்ளிட்ட பக்தி இலக்கியங்களை, தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். பாரம்பரிய வழக்கத்திற்கு எதிராக பேசும் இவர்கள், சனாதன தர்மத்தை அழிக்க திட்டமிடுகின்றனர். ஆனால், தேர்தல் என்று வந்ததும் ஹிந்துக்களிடம் ஓட்டுக் கேட்டு வருகின்றனர். திருநெல்வேலியில், 2018ல் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு தடை கோரிய தி.மு.கவினரையும் அவர்களது கூட்டணி கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். திருநெல்வேலி தொகுதி, பா.ஜ.க வேட்பாளரான நயினார் நாகேந்திரன், தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக பல்வேறு தொண்டுப் பணிகளை செய்துள்ளார். மக்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசு என சொல்பவர்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், மசூதிகளில் தலையிடுவதில்லை. ஆனால், ஏன் ஹிந்து கோயில் நிர்வாகத்தில் மட்டும் தலையிடுகின்றனர்? கோயில்களை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், நேர்மையான புரவலர்களை கொண்ட ஒரு தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும். ஹிந்துக்களை கேவலப்படுத்தியவர்களுக்கு எதிராக, மக்கள் ஓட்டுப் போடவேண்டும்’ என அகில பாரதிய துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், வி.எச்.பி மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன், ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் உடன் இருந்தனர்.