ஆஞ்சநேயர் பிறந்தது அஞ்னாத்திரியா?

ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர்தான் என்பதற்கான ஆதாரங்களை, வரும் உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல புராண இதிகாசங்கள் அடிப்படையில் ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழுவை  தேவஸ்தானம் அமைத்திருந்தது. அவர்கள் இதற்காக பல புராணங்கள், கிரந்தங்களை ஆராய்ந்த தகவல்கள் அடிப்படையில் ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரியில் பிறந்ததற்கான அதாரங்கள் உள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தனம் தெரிவித்துள்ளது.