அமித்ஷா நம்பிக்கை

மேற்கு வங்கத்தில், பா.ஜ.க சார்பில் கரக்பூரில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் லட்சக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  ‛மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்த சட்டசபைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ.க ஆட்சி அமைக்கும்’ என்றார். முன்னதாக அசாமில் அவர் கலந்துக்கொண்ட மற்றோர் பேரணியில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி, ஏ.ஐ.டி.யூ.எப் கட்சியின் பத்ருதீன் அஜ்மல் போன்ற தேசப் பிரிவினைவாதிகளுடன் கூட்டணி வைத்துள்ளதை சுட்டிக்காட்டி ‘இவர்கள் எப்படி அசாமை காப்பாற்றுவார்கள்’ என சாடினார்.