அரசு ஊழியர்களுக்கு அறிவுரை

கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பாரதத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தேசம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில், 45 வயது நிரம்பிய மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசு, அதன் அனைத்து அமைச்சகங்கள், அதன் கீழ் உள்ள துறைகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளது.