சாதனை செய்யும் பாரதம்

பள்ளி மாணவர்களுக்கான தேசிய அறிவியல் இணையவழி மாநாட்டைத் துவங்கிவைத்து பேசிய முன்னாள் இஸ்ரோ தலைவரும் சந்திராயன் திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணாதுரை, ‘இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் சாதன படைத்து வருகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் அமெரிக்காவின் நாசாவின் விண்வெளி சாதனைகளை முறியடிக்கும் காலம் விரைவில் வரும். விண்வெளி, மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் மாணவர்கள் அராய்ச்சிகள் செய்ய முன்வர வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில், 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையவழியில் பங்கேற்றனர்.