கோயிலில் கிறிஸ்தவர்கள் அராஜகம்

நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தெரு விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி பூதத்தார் கோயிலின் இடத்தில் குடியிருக்கும் ஒரு கிறிஸ்தவ  குடும்பத்தை சேர்ந்த ஜான்சன், செலின்மேரி, சைமன் ஆகியோர், அக்கோயிலிம் மதிலுக்கு சுண்ணாம்பும் காவியும் அடித்தபோது, கோயிலுக்குள் வந்து மரக்கட்டைகளை எறிந்தும் சுண்ணாம்பை கீழே கொட்டியும் சுவற்றில் வெள்ளை அடிக்க விடாமல் தடுத்தனர். தண்ணீரை ஊற்றி அவற்றை அழித்தனர். மேலும், ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசி மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்டனர். இதுவே ஒரு ஹிந்து கிறிஸ்தவ சர்ச்சுக்குள் சென்று இப்படி செய்தால் என்ன நடக்கும். தற்போதைய ஆட்சியில், உடனே குண்டர் சட்டம் பாயும் என்பது திண்ணம். தற்போது, இந்த மூவர் மீது நெல்லை மாநகரக் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பார்ப்போம்? கோயில் இடத்தை பிற மதத்தவருக்கு வாடகைக்கு விடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.