தொடரும் வன்முறைகள்

மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மமதாவின் திருணமூல் கட்சியினர் தேர்தலுக்கு பிறகு ஆரம்பித்து வைத்த வன்முறைகள் முடிவில்லா தொடர்கதை ஆகிவிட்டன. சமீபத்தில், மேற்கு வங்கத்தின் இருவேறு பகுதிகளில் இரண்டு பா.ஜ.க தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 3ம் தேதி, பீர்பம் மாவட்டத்தில் உள்ள கொய்ராசோலில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தில், பா.ஜ.க தொண்டர் இந்திரஜித் சூத்ரதர் என்பவர் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அதே நாளில் மற்றொரு நிகழ்வில் பா.ஜ.க தொண்டரான தபன் கத்துவா என்பவர் அதிகாலை புர்போ மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள ஈக்ரா என்ற பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தார். அவர்கள் இருவரின் குடும்பத்தினரும் இதற்கு காரணமாக திருணமூல் கட்சியை குற்றம் சாட்டியுள்ளனர்.