இதுவா மத சகிப்புத்தன்மை

கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள கலஞ்சூரில் முஸ்லிம் பெண் ஒரு ஹிந்து இளைஞரை விரும்பி திருமணம் செய்துள்ளார். அந்த இளைஞரின் தாய் தந்தையின் வீட்டருகிலேயே வசித்து வந்த அவர், சொத்து சம்பந்தமாக பேச, தனது பெற்றோரை சந்திக்க சென்றபோது, அவரது சகோதரியும் மைத்துனரும் இணைந்து இவரை கத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர், காப்பாற்றப்பட்டு அருகில் உள்ள ராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, இது சாதாரண சொத்து தகராறுதான் என கூறுகிறது. ஆனால், இது ஒரு கௌரவக் கொலை முயற்சியாக இருக்கலாம் எனும் கோணத்தையும் மறுப்பதற்கில்லை.