9ம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோவில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சித் திட்டம்

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தின்கீழ் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாம், மே 11 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களில் இருந்தும் தலா 3 மாணவா்கள் தோ்வு செய்யப்பட இருக்கின்றனா். தற்போது 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.

அதனால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்பத்தி விண்ணப்பிக்க வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களை, இஸ்ரோவின் இணையதளத்தில்(‌h‌t‌t‌p‌s://‌w‌w‌w.‌i‌s‌r‌o.‌g‌o‌v.‌i‌n/)  தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.