60 லட்சம் பேர் மதமாற்றம் – கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ்

 ‘ஆண்டுக்கு, 60 லட்சம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டால், மூன்று ஆண்டுகளில், தமிழகத்தை அசைத்து விடலாம்,” என, கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், லாசரஸ் பேசியுள்ளதாவது: பெந்தகோஸ்தே மாமன்றத்தில், 38 ஆயிரம் சபைகள் இணைந்து இருக்கின்றன. 60 லட்சம் உறுப்பினர்கள் – இவர்களை விஸ்வாசிகள் என அவர் குறிப்பிடுகிறார் – இருக்கின்றனர்.

2020ல் ஒரு விஸ்வாசி, ஒரு ஆத்மாவை கொண்டு வந்தால், அடுத்த ஆண்டு, 1.20 கோடி மக்கள். அதற்கடுத்த ஆண்டு, அதற்கடுத்த ஆண்டு என, மூன்று ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.எந்த இடத்தில், எப்போது அவர் பேசினார் என்ற தகவல் வெளியாகவில்லை.