3 நாள் பயணம்: வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வரும் மார்ச் 15, 16, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார். 15ம் தேதி சேலத்திலும், 16ம் தேதி கன்னியாகுமரியிலும், 18ம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். கடந்த மார்ச் 4ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதற்கு முன்னதாக, தமிழகம் வந்த பிரதமர் மோடி திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். குலசையில் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

 

இந்நிலையில், 3வது முறையாக வரும் மார்ச் 15ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 15ம் தேதி சேலத்திலும், 16ம் தேதி கன்னியாகுமரியிலும், 18ம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், பிரதமர் மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் பெறுகிறது.