ஹிந்து ஆன்மிக கண்காட்சியில் மாணவர்கள் கோலாகலம்

வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், 11வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி, நேற்று துவங்கியது. .முதல் நாள் நிகழ்வாக, ‘ஜீவ ராசிகளை பேணுதல்’ எனும் தலைப்பில், கோ, கஜ, துளசி பூஜை நடந்தது.இதில், ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.இதையடுத்து, மேதா தட்சிணா மூர்த்தி ஹோமம், பண்பு சார்ந்த ஹோமங்கள், வள்ளலார் அகவல், இளைஞர்களுக்கான போட்டிகள் நடந்தன.மதியம், 1:15 மணி முதல், பள்ளிகளின் கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து கர்நாடக நாட்டுப்புறக் கலைகள் நடந்தன. நேற்று மாலை, 4:15 மணி முதல் ஹிந்துஸ்தானி பஜன், குஜராத்தி சமூக பாரம்பரிய கலைகள், மராட்டிய சமூக அபங்க் பஜன் ஆகியவை அரங்கேறின.