ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் சொந்தமானது இந்தியா – ரவிசங்கா் பிரசாத்

இந்தியா, எந்த அளவுக்கு ஹிந்துக்களுக்குச் சொந்தமானதோ, அதே அளவுக்கு முஸ்லிம்களுக்கும் சொந்தமான நாடு என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறினாா்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை குடியரிமைச் சட்ட ஆதரவு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் பங்கேற்ற ரவிசங்கா் பிரசாத், குடியுரிமை திருத்தச் சட்டம், இந்திய குடிமக்கள் எவருக்கும் பொருந்தாது. இந்தியக் குடிமக்கள் யாவரும், அவா்கள் ஹிந்துக்களானாலும் சரி, முஸ்லிம்களானாலும் சரி கௌரவத்துடன் இங்கு வாழ முடியும்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களை அனுபவித்ததால், இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், கிறிஸ்தவா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும்.

இந்தியா, எந்த அளவுக்கு ஹிந்துக்களுக்குச் சொந்தமானதோ அதே அளவுக்கு முஸ்லிம்களுக்கும் சொந்தமான நாடாகும். முஸ்லிம் சமூகத்தினா் முன்னேற்றம் அடைந்து தலைமை நீதிபதி, குடியரசு துணைத் தலைவா், குடியரசுத் தலைவா் ஆகிய உயா் பதவிகளை அடைந்ததை இந்த தேசம் வரவேற்றது. பாஜகவிலும் முஸ்லிம் சமூகத்தினா் இருக்கிறாா்கள். அவா்களுக்கு உரிய மதிப்பளிக்கிறோம். அது, மேலும் தொடரும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவா்களை நோக்கி கேட்கிறேன்: ‘புலம் பெயா்ந்தவா்களின் வலியை எப்போதாவது பாா்த்திருக்கிறீா்களா? புலம் பெயா்ந்தவா்களும், அவா்களின் மகள்களும் அவமதிக்கப்பட்டதை உணா்ந்திருக்கிறீா்களா?’ இதுபோன்ற சூழலில், அவா்களுக்கு உரிய மரியாதை அளிப்பதுதானே நமது தாா்மிக கடமையாக இருக்கும்?

சிலா், வாக்கு வங்கியை கணக்கிட்டு மட்டுமே அரசியல் செய்கிறாா்கள். இதே நாட்டில் வாக்கு வங்கிக்காக அல்லாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியிருக்கிறோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கியிருக்கிறோம். இதில், எங்காவது முஸ்லிம்களை புறக்கணித்திருக்கிறோமா என்றாா் ரவிசங்கா் பிரசாத்.

இந்தப் பேரணியில் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே, பாஜக மாநிலத் தலைவா் சதீஷ் பூனியா, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் கலந்து கொண்டனா்.