ஸ்வர அமுதம்

இசைக் கருவி இசைக்கக் கூடிய இளம் கலைஞர்கள், தங்கள் இசையால் மக்களின் உள்ளங்களை வெல்ல தமிழக ஆர்.எஸ்.எஸ், பி.எஸ்.எஸ் அமைப்புகள் இணைந்து ‘ஸ்வர அமுதம் – 2020’ எனும் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளன. இதில் 13 வயது முதல் 30 வயதுக்குள்ளான இளைஞர்கள், தங்கள் இசையால், தெய்வ பக்தி பாடல்களையும், பாரதியின் தேசபக்தி பாடல்களையும் இசைத்துக் காட்ட வேண்டும். மக்களின் மனதில் இருக்கும் தேசபக்தியையும், தெய்வபக்தியையும் தட்டி எழுப்பும் வண்ணம் அந்த பாடல்கள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள், இதற்கு https://bit.do/swara-amudham என்ற இணையதளத்தில் 27-டிசம்பர் 2020க்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ஏதுமில்லை.