ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் மஹா ருத்ர பூஜை: பிரபலங்கள் பங்கேற்பு

கோவையில் ‘வாழும் கலை’ அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்ற, இரண்டு நாள் மஹா ருத்ர பூஜை நிகழ்ச்சி, கோவை ‘கொடிசியா’ வளாகத்தில் நடந்தது. நேற்று முன் தினம் மாலையில் நடந்த, ‘தியானிக்கிறது கோவை’ நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தியானம் செய்தனர்.

போதை பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இரண்டாவது நாள் நிகழ்வாக, நேற்று கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகம், ‘இ’ ஹாலில் பூஜை நடந்தது.  இரண்டு மணி நேர தியானம், சிவருத்ர வேள்வி, மந்திரங்கள் ஓதி, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில், பூஜைகள் நடந்தன. சிரவை ஆதீனம் குமர குருபரசுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பங்கேற்றனர். கோவையின் பிரபல தொழிலதிபர்கள், பொதுமக்கள் ஆசி பெற்றனர்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, செயலர் முருகானந்தம் ஆகியோரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்து ஆசி பெற்றனர்.